2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

சாய்ந்தமருதில் 'ஜனகிருல' வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பையொட்டி, நடைமுறைப்படுத்தப்படும்  'ஜனகிருல' மானிய வீடமைப்பு வேலைத்திட்ட நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


வறிய குடும்பங்களுக்கான புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும்; இந்த வேலைத்திட்டம், கல்முனை பிராந்திய தேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்தின் உதவி முகாமையாளர்களான ஏ.ஏ.அஸீஸ், ஏ.ஏ.மஜீட் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.   
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் மற்றும் சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயாலளர் எம்.ஐ.எம். தௌபீக் அதிதிகளாக கலந்துகொண்டதுடன், சாய்ந்தமருது  ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகளும் அரசியல்துறை சார்ந்தோர்களும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில், தெரிவுசெய்யப்பட்ட பயனாகளுக்கு வீட்டு அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்பட்டதுடன், நிகழ்வில் இறுதியில் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .