2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

நூர்தீன் மசூரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபை அமர்வுகள் ஒத்திவைப்பு

Super User   / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக கல்முனை மாநகர சபையின் இன்றைய அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று மாநகர முதல்வர் எஸ்.இஸட்.எம். மஸூர் மௌலான தலைமையில் கூடியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூரின் திடீர் மறைவையொட்டி அனுதாப பிரேரனை முன்வைக்கப்பட்டதோடு மாநகர சபையின் கூட்ட அமர்வுக்கான நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய அமர்வில் எதிர்க்கட்சியினர் உட்பட 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டு இப்பிரேரனைக்கு ஏகமானதாக ஆதரவு வழங்கினர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .