2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

நூர்தீன் மசூரின் மறைவையொட்டி துஆப் பிரார்த்தனை

Super User   / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

காலஞ்சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூரின்  மறைவையொட்டி துஆ  பிரார்த்தனை இன்று மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் அல்ஹாஜ் ஏ.ஆதம்பாவா மௌலவி துஆப் பிரார்த்தனையை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பெருந்திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை,  சாய்ந்தமருது, கல்முனை மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதுடன் துக்கதினமும் அனுஸ்டிக்கப்படுகின்றது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .