2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

நகரவனமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வாகை மரம் நடும் திட்டம்

Super User   / 2010 டிசெம்பர் 04 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை சுற்றாடல் பசுமை பாதுகாப்பு அமைப்பின் நகரவனமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வாகை மரங்கள் நடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை இறைவெளிக்கண்ட சுனாமி வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்றது.

கல்முனை சுற்றாடல் பசுமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எம்.எம்.நிப்றாஸ் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட உதவி வன அதிகாரி என்.எம்.நபீஸ், கல்முனை அனைத்து பள்ளிவாசல் பொதுநிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் சட்டத்தரணி யூ.எம்.நிஸார், பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.எல்.ஜெமீல் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த வேலைத்திட்;டம் இப்பிரதேசத்திலுள்ள ஏனைய சுனாமி வீட்டுத்திட்டங்களிலும் விஸ்தரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .