Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 17 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். மாறன்)
அக்கரைப்பற்று பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சாரதியொருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
அக்கரைப்பற்று 7௮ பொது வீதியிலுள்ள வீட்டில் சாரதியாக கடமையாற்றும் மேற்படி நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் வாகனத் தரிப்பிட கராச் கதவைத் திறந்து உழவு இயந்திரத்தை எடுக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
கோளாவிலி முதலாம் பிரிவைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான சண்முகம் ரஞ்சன் (38 வயது) என்பவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் ஆவர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago