2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வெள்ள பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உதவி பொருள்கள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீரமுனையை சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், குழந்தைகளுக்கு உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனமான பீப்பிள் சல்வேசன் போரம், சுவிட்ஸிலாந்து மக்களுடன்; இணைந்து குழந்தைகளுக்கான பால்மா பக்கட்டுக்கள், பிஸ்கட்டுக்கள் மற்றும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் நேற்று திங்கட்கிழமை வழங்கினர்.


இந்நிகழ்வில் பீப்பிள் சல்வேசன் போரம் அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.கணேஸ்; நிர்வாக உறுப்பினர்கள், வீரமுனை கிராமசேவையாளர்கள் மற்றும் வீரமுனை இணையதளக்குழுவினர்கள் கலந்துகொண்டனர். இணையக்குழுவின் செயலாளர் திரு.கே.சத்தியராஜ்; ஆரம்ப உரையை ஆற்றியதோடு இவ் அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.கணேஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இவ் வெள்ள அனத்தத்தினால் சிறுவர்கள் உளத்தாக்கத்திற்குட்பட்டிருந்தனர். அவர்களது உளவிருத்தியை விருத்தி செய்யும் நோக்கில் இப்பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .