Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 25 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீரமுனையை சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், குழந்தைகளுக்கு உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனமான பீப்பிள் சல்வேசன் போரம், சுவிட்ஸிலாந்து மக்களுடன்; இணைந்து குழந்தைகளுக்கான பால்மா பக்கட்டுக்கள், பிஸ்கட்டுக்கள் மற்றும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் நேற்று திங்கட்கிழமை வழங்கினர்.
இந்நிகழ்வில் பீப்பிள் சல்வேசன் போரம் அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.கணேஸ்; நிர்வாக உறுப்பினர்கள், வீரமுனை கிராமசேவையாளர்கள் மற்றும் வீரமுனை இணையதளக்குழுவினர்கள் கலந்துகொண்டனர். இணையக்குழுவின் செயலாளர் திரு.கே.சத்தியராஜ்; ஆரம்ப உரையை ஆற்றியதோடு இவ் அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.கணேஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இவ் வெள்ள அனத்தத்தினால் சிறுவர்கள் உளத்தாக்கத்திற்குட்பட்டிருந்தனர். அவர்களது உளவிருத்தியை விருத்தி செய்யும் நோக்கில் இப்பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago