Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2011 பெப்ரவரி 05 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
மழையின் காரணமாக நற்பிட்டிமுனையில், வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், குடும்பப்பெண் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நற்பிட்டிமுனை முதலாம் பிரிவில் வசிக்கும் 53 வயதுடைய எஸ்.டி.ஆசியா பீபி என்பவரே நேற்று அதிகாலை தனது வீட்டினுல் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததனால் படுகாயங்களுக்குட்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இடிபாட்டுக்குள்ளான வீட்டினை கல்முனை பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டனர்.
அடை மழையினால் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல கட்டிடங்கள் இடிபாட்டுகுள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago