2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கல்முனை மாநகரசபை ஆணையாளரை தாக்க முற்பட்டதாக முன்னாள் உறுப்பினர் மீது புகார்

Menaka Mookandi   / 2011 மார்ச் 23 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகரசபை ஆணையாளர் எம்.எம்.நியாஸை முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் தாக்க முற்பட்ட சம்பவம் ஒன்று இன்று கல்முனை மாநகரசபையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆவணம் ஒன்றில் கையொப்பமிடுமாறு தாக்கமுற்பட்டவர் ஆணையாளரை கோரியபோது,  இந்நடவடிக்கைக்கு தேவையான ஏனைய ஆவணங்களை இணைத்து தருமாறு, இதற்கு பொறுப்பான மாநகரசபை ஊழியரை ஆணையாளர் பணித்துள்ளார்.

இதன்போது, மேற்படி முன்னாள் உறுப்பினர் தகாதவார்த்தை பிரயோகங்களுடன் ஆணையாளரை தாக்கமுற்பட்ட போது அவ்விடத்தில் இருந்த மாநகரசபை உறுப்பினர் ஒருவர் தடுத்துள்ளதாக மேற்படி முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 


  Comments - 0

  • mahsmali Thursday, 24 March 2011 02:08 PM

    Dear Commissioner,
    You have to take serious action against this thugs. then only we can do our job properly.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .