2025 ஜூன் 09, திங்கட்கிழமை

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொத்துவில் சந்தையினால் வியாபாரிகள் சிரமம்

Super User   / 2011 ஏப்ரல் 25 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

பொத்துவில் சந்தை பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 300 பேரை அவ்விடத்திலிருந்து அகற்றிவிட்டு கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடத்தில் சுமார் 50 கடைகளுக்கான அறைகளே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஏனைய வியாபாரிகள் நடை பாதைகளிலும், கட்டிடத்தைச் சூழவும் தமது வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மேற்படி சந்தைக் கட்டிடத்தில் அமைக்கப்பட்பட்டுள்ள கடைகள் முறையாகத் திட்டமிட்டு நிர்மாணிக்கப்படாமையால், வெளிச்சமின்றிக் காணப்படுவதாகவும், இதனால், பகல் வேளைகளில் கூட மின்குமிழ்களை எரிய விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, முறையான திட்டமிடல்களுடன் இப்பகுதியிலுள்ள வியாபாரிகள் அனைவரையும் உள்ளடக்கும் வகையிலான சந்தை கட்டிடமொன்றை அமைத்து தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கையின் முக்கிய சுற்றுலாத்தளமான அறுகம்மை அமைய பெற்றுள்ள பொத்துவில் பிரதேசத்துக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பிரயாணிகள் வந்து செல்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .