2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள் இடமாற்றம்; மாகண முறைப்பாட்டு குழுவின் பரிந்துரைகள் அடுத்த வாரம் வெளியாகும

Super User   / 2011 ஏப்ரல் 28 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்ட மேலதிக ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் ஆராய்ந்த கிழக்கு மாகண சபை முறைப்பாட்டு குழுவின் பரிந்துரைகள் அடுத்த வாரம் வெளிவரும் என குறித்த குழுவின் தலைவரும் சபை தவிசாளருமான எச்.எம்.எம்.பாயிஸ் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

குறித்த அறிக்கையை தயாரிப்பதற்காக இக்குழுவினர் இன்று கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்களிலுள்ள சில பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடினர்.

கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாதினால் அம்பாறை மாவட்ட மேலதிக ஆசிரியர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யும் படி சபையில் முன் வைத்த பிரேரனை மற்றும் கிழக்கு மாகாண சபை முறைப்பாட்டு குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கிணங்கவே இந்த விஜயம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சில அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சதுர் ஆகியோரை சந்தித்த இக்குழுவினரின் பரிந்துரைகளை வெளியிட முன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரை சந்திக்கவுள்ளது.

இக்குழுவின் பரிந்துரைகள் மாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எச்.எச்.எம். பாயிஸ், எம்.ஜவாஹர் சாலி, ஏ.எம்.மஜீட், எம்.மஹ்ரூப் மற்றும் புஷ்பாராசா ஆகியோர் கிழக்கு மாகாண சபையின் முறைப்பாட்டு குழுவில் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .