Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 30 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
மன்னம்பிட்டி ஆற்றில் நேற்று வான் வீழ்ந்ததில் பலியானவர்களின் சடலங்கள் பொலநறுவை வைத்தியசாலையிலிருந்து தற்போது இறந்தவர்களின் சொந்த இடமான மருதமுனைக்கு கொண்டுவரப்படுவததுடன் இன்று சனிக்கிழமை இரவு ஜனாஸா நல்லடக்கம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மருதமுனையிலிருந்து நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் ஏழு பேருடன் கொழும்பு நோக்கி பயணித்த வான் ஒன்று மன்னம்பிட்டிய பாலத்திலிருந்து ஆற்றுக்குள் வீழ்ந்ததில் வானில் பயணம் செய்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மரணமடைந்த அனைவரும் மருதமுனையைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவத்தில் வானை ஓட்டிச் சென்ற உமர்தீன் முகம்மது ஆசிக் எனும் வைத்தியரொருவர் உயிர்தப்பியுள்ளார்.
சம்பவத்தில் மரணமடைந்த இவருடைய மனைவி சாகிரா, ரித்திக் ரெமி மற்றும் மனைவியின் தாய் கதிஜா உம்மா உட்பட ஆறு பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வைத்தியரின் மரணமடைந்த மனைவி சாகிரா ஓர் ஆசிரியையாவார். சம்பவத்தின் போது இவர் 05 மாத கர்ப்பவதியாக இருந்தார்.
இந்த சம்பவத்தில் பாத்திமா இம்சா எனும் 12 வயது சிறுமியொருவரும் மரணமாகியுள்ளார்.
இதேவேளை, வானில் பயணித்த மீராசாஹிபு முகம்மது ஜஹான் என்பவரும் அவருடைய மனைவி சுஆதா என்பவரும் இந்த சம்பவத்தில் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்த சுஹதா ஓர் ஆசிரியையாவார்.
வெளிநாடொன்றிலிருந்து விடுமுறையில் மருதமுனை வந்திருந்த வைத்தியர் ஆசிக் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் விடுமுறையின் பின்னர் மீண்டும் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வானில் பயணித்த ஏனையோர் இவர்களை வழியனுப்புவதற்காக சென்றவர்களாவர்.
இன்று சனிக்கிழமை குறித்த வைத்தியரும் அவரின் குடும்பத்தினரும் விமானத்தில் பயணிக்க ஏற்பாடாகியிருந்தது.
பிரேதங்கள் பொலநறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மருதமுனைக்கு கொண்டு வரப்படுகின்றது.
மன்னம்பிட்டி ஆற்றில் வான் கவிழ்ந்தது: நால்வர் பலி; இருவரை காணவில்லை
மன்னம்பிட்டி வான் விபத்தில் பலியான 6 பேரின் ஜனாஸாக்களும் நல்லடக்கம்
M.L.Abooshally,Doha,Qatar Monday, 02 May 2011 05:35 AM
எங்கள் மருதமுனை மண்ணின் மாணிக்கங்களே! உங்கள் துயரம் எங்கள் மனதில் நீங்கா வேதனையை ஏற்படுத்தியது. உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.உங்கள் அனைவரையும் கப்ர் வேதனையில் இருந்தும், நரக வேதனையில் இருந்தும் பாதுகாத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் நறுமணம் வீசும் சுவர்க்க பூங்காவில், அல்லாஹ் நிரந்தரமாக வாழ வைப்பானாக! ஆமீன் .
( அபுசாலி, ருஹாஸ், ஹிஜாஸ், அப்ரீஸ் மற்றும் குடும்பத்தினர் )
Reply : 0 0
John Paul Sunday, 01 May 2011 06:47 PM
இது ஒரு மிக பெரிய இழப்பு. இவர் என்னோடு வேலை பார்க்கும் அன்பான நண்பர். இவரது மனைவி மிகவும் அன்புள்ளம் கொண்டவர். டாக்டர் ஒரு மிக சிறந்த மனிதர். இவருக்கு நேர்ந்த இக்கொடுமை இனி இவ்வுலகில் வேறு யாருக்கும் நடக்க கூடாது என்று இறைவனிடம் பணிந்து வேண்டுகின்றேன். இறைவா நல்ல உள்ளம் கொண்ட அன்பு டாக்டர்க்கு எல்லாவித சக்தியும் கொடுத்து அவரை தேற்றி நல்ல முறைகளில் பாதுகாத்து கொள்ளும். மிகவும் மன வேதனையுடன் .........ஜான் பால் மற்றும் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் ....... மஸ்கட்....ஓமன்.....
Reply : 0 0
M.A.Safras Nilam from Maruthamunai Sunday, 01 May 2011 06:53 PM
எனது நண்பன் சப்ராசின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....யா அல்லாஹ மரணித்த அனைவரினதும் கப்ருகளை குளிர்ச்சிப்படுத்தி நாளை மறுமையிலே சுவனத்தில் நிம்மதியாக வாலவைப்பாயாக....டாக்டர் ஆசிக், சப்ராஸ், தில்சாத், அஷ்ஹர்டீன் சேர் மற்றும் ஜகானின் குடும்பத்தினரும் இத்துயரிலிருந்து மீள பிரார்த்திக்கிறேன்.....
Reply : 0 0
Chandrabose Sunday, 01 May 2011 06:54 PM
பரிதாபகரமான மரணம். என்னால் சகித்துகொள்ள முடியவில்லை. இனிமேலாவது இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்வது யாவரினதும் பொறுப்பாகும் . மனிதனின் உயர் விலைமதிக்கதக்கது என்பதை இங்கு சொல்லப்பட்ட அனுதாப செய்திகள் உணர்த்துகின்றன . எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்
Reply : 0 0
m c a fareed Sunday, 01 May 2011 07:00 PM
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்
யா அல்லாஹ் இவர்களை நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்ப்பாயாக
ஜவ்தத் பார்ஹன், ஹசனத் பார்ஹன்
Reply : 0 0
Dr.S.najimudeen, Vancouver,Canada Sunday, 01 May 2011 07:13 PM
சம்பவத்தைக் கேள்வியுற்று மிகுந்த மனக் கவலையடைந்தேன். எனது கனடா வாசம் இந்த உறவுகளை விட்டுத் தூரமாக்கி விட்டது.உலகம் முழுவதும் இது போன்ற துன்பக் கதைகளை ஒவ்வொரு நாளும் சாட்சிகலாயிருந்து கேள்வியுறுகிறோம். பார்க்கிறோம், என் செய்வது உங்கள் துயரத்தை ஆற்றுவது காலத்தின் கையிலேயே இருக்கிறது. உங்களுக்காகப் பிரார்த்திப்பது மட்டுமே எங்கள் கையிலுண்டு. அல்லாஹ் இந்தக் காயத்தை விரைவில் குனமாக்கட்டும் என் தோழா ஜமால்டீன்.
Reply : 0 0
p.pushparajah Sunday, 01 May 2011 08:13 PM
அனைவரதும் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
கே.பி.பி.புஷ்பராஜா
Reply : 0 0
naleer Sunday, 01 May 2011 09:13 PM
மரணித்த சுகதாக்கள் அனைவருக்கும் இறைவன் சுவர்க்கத்தை வழங்குவானாக! இவர்களின் மறுமை வாழ்வில் ஒழி வீசிட எனது பிர்ரார்த்தனைகள். இவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள்.அல்லாஹ் இவர்களது எல்லா அமல்களையும் பொருந்திக் கொள்வானாக!ஆமீன்.
Reply : 0 0
ansar Sunday, 01 May 2011 09:21 PM
இன்னலிலாஹி வைன்ன அலைஹி ராஜிஊன்
Reply : 0 0
J.M. Haris Sunday, 01 May 2011 09:25 PM
இந்த சம்பவம் எனக்கு ரொம்ப கவலையாக உள்ளது...என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் சுவன பாக்கியத்தை கொடுப்பானாக
Reply : 0 0
Riyaaz from UK...... Sunday, 01 May 2011 10:45 PM
இந்த துயர செய்தி கேட்டு என் இதயமே ஒரு கணம் நின்று போனது. இந்த சோகத்தில் இருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை.
எல்லாம் வல்ல இறைவன் இறையடி எய்திய என் ஆருயிர் நண்பனின் குடும்பத்தினரின் பாவங்கங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌசை பரிசளிபானாக!மேலும் அவன் எனது நண்பனுக்கு இந்த சோக கடலில் இருந்து மீண்டு வரும் மனவலிமையை கொடுப்பானாக!
Reply : 0 0
Murshid Monday, 02 May 2011 12:05 AM
I Know Dr Asheek and his family in Oman.I cant imagin this incident,may allah grant jannathul firthouse for all.
Reply : 0 0
Nifras Ismail Monday, 02 May 2011 05:22 AM
இன்னல்லில்லாஹி வைன்ன இல்லிஹி ராஜிஊன்
Reply : 0 0
Jinnah Sunday, 01 May 2011 06:42 PM
innaki lahi bai innakilahi rejuyun
jahan nee sinne vayasile mana panthathil sarnthu sinne vayesile un thunaiviyareum sarththu kondu sotpe neraththil un ivuleke valkkai payenththei mutiththu kondaye..aththuten un kutumpe ankeththevereyum sarththu kooddi kondu sandruvittai............un sinne siripiil oor alakuta............
allah unekkum un kutumpeththeverukkum
jannaththul firthous anum sorkke vaselei thirenthu thare vandum ane allorum prarththikkindrom..........
Reply : 0 0
siva- canada Monday, 02 May 2011 09:50 AM
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் !
Reply : 0 0
Hasme Haleeldeen Monday, 02 May 2011 06:13 PM
யா அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக அமீன் .
Reply : 0 0
pjeyabharathy Monday, 02 May 2011 06:35 PM
ilankai ocpc valaichenai. உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் அனைத்து ஊழியர்களும் ஆழ்ந்த அனுதாபங்களை காணிக்கையாக்குகின்றோம்.
Reply : 0 0
athavullah mohamed riyas Monday, 02 May 2011 07:07 PM
யா அல்லாஹ் இவர்களுக்கு சஹீது உடைய அந்தஸ்தை கொடுத்து ஜன்னத் பிர்த்தவஸ் எனும் சொர்கத்தை கொடுப்பாயாக ஆமீன் ....
Reply : 0 0
susan Monday, 02 May 2011 11:29 PM
inna lillahi wa inna illaihi rajioon
Reply : 0 0
Aslamsuja Tuesday, 03 May 2011 12:04 AM
feeling really bad........may allah bless them
Reply : 0 0
irfan from kalmunai Tuesday, 03 May 2011 12:51 AM
யா அல்லாஹ் இவர்களது பாவத்தை மன்னித்து சுவர்க்கத்துக்கு அனுப்புவாயாக. ஆமீன்.
Reply : 0 0
s.m sifras Tuesday, 03 May 2011 05:01 AM
அனவைருக்கும் சுவர்க்கம் கிடைக்கணும் என்று அல்லாஹ்விடம் நான் துவாஹ் கேட்டுக்கொள்கிறேன்
அமீன் அமீன் யார்பால் ஆலமீன்
Reply : 0 0
Zawahir Hassan Wednesday, 04 May 2011 04:06 PM
யா அல்லாஹ், இவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளை மன்னித்து இவர்களையும் சுவனவாதிகளாக ஆக்கி வைப்பாயாக..... ஆமீன்
Reply : 0 0
jisan Thursday, 05 May 2011 04:06 PM
யா அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக அமீன்
Reply : 0 0
M.Sheriff Tuesday, 17 May 2011 02:27 AM
இந்த இடம் ஒரு deathtrap. போதிய பாதுகாப்பு வேலிகள் இல்லை. முன் எச்சரிகைகள் இல்லை. இன்னும் பல மரணங்கள் ஏற்படலாம்.
Reply : 0 0
Nifras kariapper Sunday, 01 May 2011 06:26 AM
Inna lillahi wa inna ilaihi rajioon..
Let us pray al mighty allah to give them jannathul firthouse.....
Reply : 0 0
MOHAMED IHSAN Sunday, 01 May 2011 12:28 AM
inna lillahi vaenna ilaihi raajiuoooon
pry for allah insaaah allaaah
Reply : 0 0
Thasneem From London Sunday, 01 May 2011 01:48 AM
நாங்கள் எல்லோரும் இங்கு லண்டனில் இருந்து மௌதான எல்லோருக்கும் எமது இறுதி அஞ்சலியை செலுத்துவதுடன் அவர்களுக்காகஅல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம். அவர்கள் அனைவரையும் அல்லா சுவர்க்கத்தில் வைப்பானாக.
ஆசிக் அவர்களுக்கு அல்லா மனதிற்கு தைரியத்தைக் கொடுப்பானாக. லண்டனில் இருந்து தஸ்னீம், சவாஹிர, சிரோன், ஆபிரித், தாஜ்மீல், முஷ்பான்.
Reply : 0 0
Yogendran Sunday, 01 May 2011 02:22 AM
there's no words that will bring you out of this sorrow, Aasik. Let the god give you strength to come out of this soon. This shouldn't have happened... I don't have strength to read this again. This is not just a news .. all our heart is paining reading this. May god be with you.
Reply : 0 0
அஹமட் சுஹைல் Sunday, 01 May 2011 02:29 AM
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜியூன்....
Reply : 0 0
Askam Fayas from london Sunday, 01 May 2011 03:42 AM
எங்கள் இதயங்களில் என்றும் நீங்காத நினைவுகளுடன் எம்மை விட்டுப்பிரிந்து சென்ற ஆசிரியை சகிரா மற்றும் அவர் குடும்பத்தினர், அன்பு ஆசிரியர் ஜலால்தீன் அவர்களின் மகள் மற்றும் கணவன் ,அன்பின் தபால் உத்தியோகத்தர் அஸ்வர் அவர்களின் அன்பு மகள் இம்சா மற்றும் மாமியார் ஆகியோருக்கு எமது அஞ்சலியை செலுத்துவதோடு அவர்களுக்காக பிரார்த்தனை செய்கின்றோம்.......அல்லாஹ் அவர்களை சுவர்கத்தில் வைப்பானகஹா
Reply : 0 0
riyas Sunday, 01 May 2011 03:50 AM
உலகம் ஒரு அற்பம் என்பதற்கு இது ஒரு உதாரணம் . சிந்திப்பீர்களா ?
Reply : 0 0
Naleem Sunday, 01 May 2011 04:34 AM
manathai urukum saithi. unkaludaia mouth pisafiel mouth. unkaluku allah janathul pirtouse anuk suvarkathai parisalipanaka aameen
Naleem
Reply : 0 0
prasanthan Sunday, 01 May 2011 05:04 AM
இறைவனடி சேர்ந்த அனைவரினதும் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம். குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Reply : 0 0
raazil ahamed Sunday, 01 May 2011 05:15 AM
மனிதனுக்கு நற்புத்தி புகட்ட மரணம் ஒன்றே போதுமானது - ஹதீஸ். இவ்வுலக வாழ்கை அற்பமானது . மறுமை மறுமை வாழ்வு அழிவோ முடிவோ இல்லாதது . மறுமை வாழ்வுக்கு தன்னை தயார் செய்பவனே சிறந்த புத்திசாலி. சிந்திப்போம் செயல்படுவோம் .
Reply : 0 0
raazil ahamed Sunday, 01 May 2011 05:16 AM
மனிதனுக்கு நற்புத்தி புகட்ட மரணம் ஒன்றே போதுமானது - ஹதீஸ். இவ்வுலக வாழ்கை அற்பமானது . மறுமை மறுமை வாழ்வு அழிவோ முடிவோ இல்லாதது . மறுமை வாழ்வுக்கு தன்னை தயார் செய்பவனே சிறந்த புத்திசாலி. சிந்திப்போம் செயல்படுவோம் .
Reply : 0 0
sathik jamaldeen Sunday, 01 May 2011 06:15 AM
ஜஹான் இறைவன் உனதும் உனது குடும்பதினரதும் பாவங்களை மேலான இறைவன் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தை வழங்குவனாக அமீன் அமீன் யாரப்பல் ஆலமீன். உனது நண்பன் சாதிக் சவுதி அரேபியா.
Reply : 0 0
CIDDEEQUE Saturday, 30 April 2011 11:19 PM
நீங்கள் செய்த சமூக சேவைகள் மூலம் அல்லாஹ் உங்களையும் குடும்பத்தினரையும் பொருந்திக்கொள்வானாக! உங்களுடைய இந்த இழப்பானது நாட்டிற்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் முஸ்லிம் சமுதாயத்திக்குமே,! எனது ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனையும் என்றும் உங்கள் பக்கமே!
Reply : 0 0
Sawahira Thasneem From London Sunday, 01 May 2011 09:31 AM
உங்களது துக்கத்தில் நாங்கள் அனைவரும் பங்கு கொள்வதுடன் மரணித்த அனைத்து பிரியமான உறவுகளுக்கும் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கின்றோம்.
தஸ்னீம், சவாஹிரா, நுஷ்பான், தாஜ்மீல், சிரோன், அப்ர்ய்த்.
Reply : 0 0
Nilam Mukthar Sunday, 01 May 2011 11:30 AM
எதிர்பாராத இந்த இழப்பை என்றென்றும் ஜீரணிக்க முடியாது. இறையடி சேர்ந்த அனைவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தை அருள்பாலிப்பானாக. நண்பன் Dr. Aazik க்கு இத்துயரை தாங்கும் மன உறுதியும் மன நிம்மதியும் அல்லாஹ் கொடுப்பானாக.
Nilam, Rufaina and Delisha
Reply : 0 0
abdul mohamed Sunday, 01 May 2011 11:50 AM
இன்னலிள்ளஹி வ இன்னா இலிஹி ராஜிஹூன் உலகை அதிகம் நேசிக்கதீர்கள்
Reply : 0 0
Abdul Rasheed Muhammad Arafath & Badiudeen Abdul Samed - from London. Sunday, 01 May 2011 11:54 AM
இறைவா இவர்கள் அனைவரது பிழைகளை மன்னித்தருள்வாயாக , இவர்கள் செய்த சேவைகளையும், நன்மைகளையும் பொருந்தி கொள்வாயாக, மேலும் இவர்களுக்கு ஜனதுள் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை நசீபாகுவயாக. இவர்கள் பிரிவால் வாடும் உறவுகளுக்கு மன ஆறுதலும் தைரியமும் கொடுத்தருள்வாயாக ஆமீன் ,
உங்கள் பிரிவால் லண்டனில் வாடும் அரபாத் அப்துல் ரஷீத் மற்றும் பதியுத்தீன் அப்துல் சமத் குடும்பத்தினர் .
Reply : 0 0
S.F.Rajendran Sunday, 01 May 2011 03:18 PM
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
S.F.Rajendran
071-4069469
Reply : 0 0
S.F.Rajendran Sunday, 01 May 2011 03:21 PM
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
S.F.Rajendran
Reply : 0 0
A.M.Sahmy Sunday, 01 May 2011 03:21 PM
உங்கள் குடும்பத்தின் மறுமை வெற்றிக்க்காக பிரார்த்திகிறேன் .
Reply : 0 0
A.M.Sahmy Sunday, 01 May 2011 03:25 PM
உங்கள் குடும்பத்தின் மறுமை வெற்றிக்ககாய் பிரார்த்திகிறேன்!
.
Reply : 0 0
farwin Sunday, 01 May 2011 04:37 PM
நாம் எப்போதும் அல்லாஹ்விடம் விபத்துகளின் மூலம் மரணிப்பதை விட்டும் பாதுகாப்பு தேடவேண்டும் என்று எமது தூதர் (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
Reply : 0 0
Mohammed Rafi Sunday, 01 May 2011 05:21 PM
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்
யா அல்லாஹ் இவர்களை நல்லடியார்களின் கூட்டத்தி சேர்ப்பாயாக!
இவர்களுக்கு மன்னறையில் கேட்கும் கேள்விகளுக்கு இலகுவாக பதிலலிக்கச் செய்வாயாக.
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் உலகின் பிரிவு ஒரு மனித வாழ்க்கையின் முடிவு அல்ல மறுமை வாழ்வே நிரந்தர மானது மறுமையில் வெற்றி பெற மரணித்த இவர்களுக்கு துஆ செய்வோமாக......
Reply : 0 0
John Paul Sunday, 01 May 2011 06:34 PM
இது ஒரு மிக பெரிய இழப்பு. இவர் என்னோடு வேலை பார்க்கும் அன்பான நண்பர். இவரது மனைவி மிகவும் அன்புள்ளம் கொண்டவர். டாக்டர் ஒரு மிக சிறந்த மனிதர். இவருக்கு நேர்ந்த இக்கொடுமை இனி இவ்வுலகில் வேறு யாருக்கும் நடக்க கூடாது என்று இறைவனிடம் பணிந்து வேண்டுகின்றேன். இறைவா நல்ல உள்ளம் கொண்ட அன்பு டாக்டர்க்கு எல்லாவித சக்தியும் கொடுத்து அவரை தேற்றி நல்ல முறைகளில் பாதுகாத்து கொள்ளும். மிகவும் மன வேதனையுடன் .........ஜான் பால் மற்றும் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் ....... மஸ்கட்....ஓமன்.....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago