Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 30 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
"மக்களின் நலன் கருதி மக்கள் தேவையே எம் சேவை" எனும் மகுடத்துடன் இன்று சனிக்கிழமை கல்முனை அல் -அஸ்ஹர் வித்தியாலயத்தில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் நடாமாடும் சேவை நடைபெற்றது.
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கல்முனை பொலிஸ் நிலையத்தினால் கௌரவிக்கப்ட்டதோடு மக்களுக்காக முறைப்பாடுகளை பதிவு செய்தல்இ அதை விசாரணை செய்தல்இ அதன் பிரதியை உடன் வழங்கள்இ அடையாள அட்டைஇ கடவுச்சீட்டுஇ சாரதி அனுமதி பத்திரம் தொடர்பானவைஇ பிறப்பு இறப்பு பதிவு வழங்கள்இ புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல்இ மத்தியஸ்தர் சபை நடவடிக்கைஇ சாரதி அனுமதிப் பத்திரம் காலவாதியடைந்ததை புதுப்பித்தல்இ பெரும் குற்றம்இ போக்குவரத்து விதி முறைஇ பெண்கள் மற்றும் சிறுவர்கள் சம்பந்தமாகஇ போதைவஸ்த்து பாவனை தொடர்பான வடயங்கள்இ நற்சான்றிதழ் வழங்கள்இ இலவச மருத்துவ சிகிச்சை ஆகிய சேவைகள் இடம்பெற்றன.
தேசியக் கொடி ஏற்றி மங்கள ஒளியுடன் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவையில் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்களான திட்டமிடல் வைத்திய அதிகாரி டாபக்டர் எம்.எம்.எஸ். ஹபிலுல் இலாஹி, வெளிநோயாலர் பிரிவு பொறுப்பதிகாரிகளான டாக்டர் எம்.எம்.எஸ்.ஜெஸிலுல் இலாஹி, டாக்டர் எஸ்.ஏ.ஜீ.அகிலன் ஜவர்த்தன, பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.பாறூக் உட்பட பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ.றஸாக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago