2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தென் கிழக்கு பல்கலையில் விரைவில் பொறியியல் பீடம்

Super User   / 2011 மே 30 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி, ஹனீக் அஹமட்)

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உறுதியளித்துள்ளதாக, பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

  உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கதென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இன்று திங்கட்கிழமை  விஜயம் செய்த போதே இந்த உறுதியை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

பொறியியல் பீடத்தை ஆரம்பிப்பதற்கான தேவையான சகல உதவிகளையும் குவைத் அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும் கலாநிதி இஸ்மாயில் தெரிவித்தார்.

தென் கிழக்கு  பல்கலைக்கழகத்திலுள்ள தொழில்நுட்ப பிரிவை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பல்கலைக்கழகத்தில் வெற்றிடமாகவுள்ள சில பதவிகளுக்கான நியமனங்களை இன்றைய விஜயத்தின்போது உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வழங்கியதாக கலாநிதி இஸ்மாயில் மேலும் தெரிவித்தார்.

1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தென் கிழக்கு  பல்கலைக்கழகத்தில், வர்த்தக முகாமைத்துவ பீடம், கலை பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் ஆகிய பீடங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X