Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 02 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடற்கரை சிறுவர் பூங்காவொன்றை அமைக்கும் பொருட்டு கிழக்கு மாகாணசபையினால் ஒதுக்கப்பட்ட 40 லட்சம் ரூபா நிதியினை – கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அக்கரைப்பற்றுப் பிரதேசத்துக்குத் திருப்பி விட்டார் எனவும், இச் செயல் குறித்து தான் மனவருத்தம் அடைவதாகவும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.
இவ்விடயம் குpறித்து அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் மேலும் தெரவிக்கையில்ளூ
'மேற்படி பூங்காவினை அமைப்பதாயின் அதை - அட்டாளைச்சேனை பிரதேச சபையினூடாகவே அமைக்க வேண்டியதொரு நிலைமை இருந்தது. அந்த பிரதேச சபையினூடாக குறித்த கடற்கரைப் பூங்காவினை அமைச்சர் உதுமாலெப்பை அமைக்க விரும்பவில்லை.
அமைச்சர் அப்படி விரும்பாததற்கு மிகவும் பிரதானமான இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது அரசியல் பகைமை. இரண்டாவது, பூங்காவினை அமைக்கும் போது - பிரதேச சபை நிருவாகம் அதன் ஒவ்வொரு விடயத்திலும் தலையீடு செய்யும் என்பதாகும்.
இந்தக் காரணங்களை வைத்தே, அமைச்சர் உதுமாலெப்பை அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட நிதியினை அக்கரைப்பற்றுக்கு திருப்பியுள்ளார். இதன்போது, அட்டாளைச்சேனை தனது ஊர் என்று கூட அமைச்சர் உதுமாலெப்பை சிந்திக்கவில்லை.
இதுபோலவே, தற்போது நெல்சிப் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனையில் ஒரு சந்தைக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம். இந்தக் கட்டிடத்தை அமைப்பதற்குரிய நிதியில் ஒரு பகுதியும் கிடைத்து விட்டது. ஆயினும், பிரஸ்தாப சந்தைக் கட்டிடத்தை குறித்த இடத்தில் அமைப்பதற்கு அமைச்சர் உதுமாலெப்பை தடையாக இருந்து வருகின்றார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் காலா காலமாக சந்தையொன்று இயங்கி வருகின்ற இடத்திலேயே தற்போதை கட்டிடத்தை நாம் அமைக்க எண்ணியுள்ளோம். வேறொரு இடத்தில் இந்தக் கட்டிடத்தை நிர்மாணிப்பதில் எதுவித பயன்களும் இல்லை.
இருந்த போதும், அரசியல் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ஊருக்கான நல்ல திட்டங்களையெல்லாம் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல. இந்த நடவடிக்கைகள் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
எது எவ்வாறு இருந்தபோதும், அட்டாளைச்சேனைக்கான சந்தைக் கட்டிடத்தை அமைப்பதில் எவ்வாறான தடை ஏற்பட்டாலும், தற்போது சந்தை இயங்குகின்ற இடத்தில் அந்தக் கட்டிடத்தை அமைப்பதில் நாம் ஒருபோதும் பின்னிற்க மாட்டோம். மக்கள் எம்முடன் இருக்கின்றார்கள்' என்றார்.
IBNU ABOO Monday, 04 July 2011 12:05 AM
இரண்டு முஸ்லிம் ஊர்கள். அதுவும் அடுத்தடுத்த ஊர்கள் திருமணம், தொழில், நட்பு, எத்தனையோ காரியங்களில் ஒன்றுக்குள் ஒன்றாய் பினைந்திருப்பவர்கள் . இஸ்லாமியர்கள் பக்கத்து ஊரிலேயே வன்மம் பாராட்டினால் சர்வதேச ரீதியில் ஒன்றுபட்டு இஸ்லாத்தின் எதிரிகளை வீழ்த்தலாமா?
Reply : 0 0
Mohamed Rameez Friday, 08 July 2011 06:12 AM
உங்கள் கருத்துக்கு நன்றி
Reply : 0 0
Mohamed Rameez Friday, 08 July 2011 02:43 AM
உங்கள் கருத்துக்கு நன்றி
Reply : 0 0
iqbal Monday, 04 July 2011 07:53 PM
பம்பரம் ஆடுகிறது எப்போ நிக்கும் என்று பார்போம்
Reply : 0 0
senaiyuraan Monday, 04 July 2011 07:46 PM
அக்கரைபத்துக்கு எப்படி காசி போனது என்பதை ஷஹி அவர்கள் வெளி இட உள்ளார். அதன் பின்தான் எங்கட மக்குகளுக்கு உண்மை தெரியவரும்.
Reply : 0 0
senaiyuraan Monday, 04 July 2011 05:03 AM
நீங்கள் பேசுகின்றீர்களா,கதிரை பேசவைக்கிறதா? மக்கள் எல்லா நாளும் மடையர்களாக இருக்கமாட்டாங்க என்றோ ஒரு நாள் வரும் "சத்தியம் வெல்லும்".
Reply : 0 0
senaiyuraan Monday, 04 July 2011 04:52 AM
துள்ளுற மாடு பொதி சுமக்கும் கவனம்.
Reply : 0 0
senaiyuraan Monday, 04 July 2011 12:56 AM
தவிசாளர் அவர்களே சிறுவர் பூங்கா பத்தி கதைகிங்க.
உங்கட பாலத்தடி வளவில் அமைத்தால் அமைசர் தடுக்க மாட்டார்தானே உண்மையான துய்மையான எண்ணம் இருந்தால்
சிறுவர் பூங்கா அமைப்பதற்காக மூடப்பட்ட இடத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் உங்கள் பொதுநோக்கம் ஊருக்கு தெரியவரும்.
Reply : 0 0
saro Monday, 04 July 2011 12:45 AM
முனாஸ் அவர்களே யாரையும் பிழையாக நினைக்காதிங்க நீங்க திருந்தாதவரை இந்த ஊரின் நிலை படுகுழிதான் என்ன செய்யலாம் .....
Reply : 0 0
ameer Sunday, 03 July 2011 02:20 AM
நீங்கள் எப்படி அரசியல் செய்தீர்கள்? கடந்த காலம் மறந்து விட்டதா?
Reply : 0 0
saro Sunday, 03 July 2011 11:28 PM
முன் பின் அரசியல் தெரியாதே தவிசாள எப்படி எங்கட ஊரில் அபிவிருத்தி செய்ய போகின்றார் முனாஸ்?
Reply : 0 0
nanpan Sunday, 03 July 2011 08:45 PM
அக்கரைப்பற்று கலாசார மண்டபம் மற்றும் பல்தேவைக்கட்டிடம் inRu பல இலட்ச்ச maatha vaadakaikku கொடுக்கப்படிருக்கும் போது அட்டாளைச்சேனையில் கட்டாகாலி மாடுகள் படுக்கும் இடமாக இந்த அட்டாளைச்சேனை கலாசார மண்டபம் இருக்கிறது. இதுதான் சேவை?
Reply : 0 0
abdulmohamed Sunday, 03 July 2011 05:31 PM
அது முன் கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு. அட்டாளைச்சேனையில் முன்பும் உங்கள் கட்சிதானே இருந்தது அவர் அப்படி ஒன்றும் ஊரை வெறுக்கும் மந்திரி இல்லை தவிசாளர் அவர்களே. காரியாலயம் இருந்த இடத்தை எராவவது மீன் சந்தை ஆக்குவார்களா அதுவும் பள்ளிவாசலுக்கு முன்னாள்? ஹி ஹி ஹி
Reply : 0 0
hoh Sunday, 03 July 2011 04:05 PM
ஓஓஒ அதவுல்ல
Reply : 0 0
zaro Sunday, 03 July 2011 03:58 PM
நல்லதே நடக்கட்டும் விடுங்கள் ...
Reply : 0 0
saro Sunday, 03 July 2011 03:19 PM
தாங்கள் செய்வதும் இல்லை மத்தவரை விடுவேதும் இல்லை உன்களுக்குதானே மக்கள் ஆணை தந்தாங்க.
அப்போ நீங்கதானே செய்யனும் இயலுமhனால் ஒரு கல்லெனும் நாட்டுங்கே சந்தோசபடுவோம்.
Reply : 0 0
Munas Sunday, 03 July 2011 02:09 PM
மேலே கேள்வி கேட்டிருக்கும் சகோரதரர் அமீர் அவர்களே... அட்டாளைச்சேனை பிரதேச தவிசாளர் கடந்த காலத்தில் அரசியல் செய்த ஒருவரல்ல. அவர் - திடீரென அரசியலில் குதித்து தவிசாளரானவர். அவரிடம் கடந்த கால அரசியல் மறந்து விட்டதா என்று நீங்கள் கேட்டிருப்பதன் மூலம், உங்கள் அரசியல் அறிவின் பூச்சியத் தன்மையை வெளிக்காட்டியிருக்கிறீர்கள்!
Reply : 0 0
IBNU ABOO Sunday, 03 July 2011 02:56 AM
அமைச்சர் உதுமாலெப்பை பரந்த மனமுடையவராகும் . அதனால்தான் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற மனப்பாங்கில் அக்கரைப்பற்றையும் தன் ஊர் போல் நேசிக்கிறார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago