2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பல்வேறு துறைகளிலும் நீண்ட காலம் சேவையாற்றிய முதியவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2011 நவம்பர் 01 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு சிறியாணி விஜேவிக்கிர பவுண்டேஷனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் நீண்ட காலம் சேவையாற்றி முதியோர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சிறியாணி விஜேவிக்கிர, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்கசர் பிரமலால் ரணகல, அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள் மற்றும் முதியவர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்கள்.

இதன்போது கல்வி, சுகாதாரம், சட்டம், இலக்கியம், சமூக சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவையாற்றிய முதியவர்கள் பலர் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • neethan Wednesday, 02 November 2011 12:39 AM

    அம்மணி சான்றிதல் வழங்குவதால் முதியோருக்கு என்ன பிரயோசனம்? இன்னுமொரு வேலை வாய்ப்பு நேர்முக பரீட்சைக்கு சமர்ப்பிப்பதா? நொந்து போயுள்ள நிலையில் பொற்கிழி(பணம்) கொடுத்தால் ஊட்டசத்து மருந்து வாங்கவாவது பிரயோசனமாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .