2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பெண்கள் சாரணியர்கள் ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 07 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரணிய சங்கத்தின் பெண்கள் சாரணியர்களின் முதலாவது ஒரு நாள் ஒன்றுகூடல் பயிற்சிப் பாசறை நிகழ்வு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

அக்கரைப்பற்று - கல்முனை    மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில்    பயிற்சிகளுக்கு பொறுப்பான உதவி மாவட்ட ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபாவின் வழிகாட்டலில்  இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில்  ஐந்து பாடசாலைகளிலிருந்து 100 மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் பயிற்சிகளைப் பெற்றதுடன் போட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு திறமைகளை வெளிக்காட்டி பரிசில்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினரும் உதவி மாவட்ட ஆணையாளருமான  எஸ்.எல்.முனாஸ் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினார்.  கல்முனை அல்-மிஸ்பாஹ் மகாவித்தியாலயத்தின் பெண்கள் சாரணியத்தின் வளர்ச்சிக்கான நிதியின் காசோலையையும் அப்பாடசாலையின் சாரணிய அணித்தலைவியிடம்  வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0

  • நண்பன் Monday, 07 November 2011 11:09 PM

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் பாடசாலை விளையாட்டு மற்றும் பல சேவைக்காக தன்னை அர்ப்பணித்திருக்கும் சேவகனான முனாஸுக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    razeek kalmunai Tuesday, 08 November 2011 01:39 AM

    முஸ்தபா ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    NILAM Tuesday, 08 November 2011 02:06 AM

    நல்ல சேவைகள் பலவழிகளிலும் செய்ய முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு அட்டாளைச்சேனை உறுப்பினர் முனாஸ்.

    Reply : 0       0

    unarvu Thursday, 10 November 2011 06:38 PM

    இது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. அவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் போது அரசு கொடுப்பதே போதும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .