2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

“எடின்பரோ கோமகன் விருது” க்கான கள ஆய்வுப் பயணம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 08 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

“எடின்பரோ கோமகன் விருது” க்கான மூன்று நாள் களஆய்வுப் பயணத்தை கல்முனையில் இருந்து 38 இளைஞர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி விருதைப் பெற்றுக்கொள்வதற்காக கல்முனை தீனத் இளைஞர் கழகத்திலிருந்து 38 இளைஞர்கள் பொத்துவில் கொட்டுக்கல் எனுமிடத்திற்கு கள ஆய்விற்காக சென்றுள்ளனர். இவர்கள் அங்கு முகாமிடல். பிரதேசம் பற்றிய ஆய்வு. காலை பகல் உணவுகளை தயாரித்தல் போன்ற பயிற்சிகளையும் பெறவுள்ளனர்.

இப்பயணத்தை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு கல்முனை கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகரும்  மாநகர பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயளாலருமான நிசாம் காரியப்பர்  தனது இல்லத்தில் வைத்து அறிவுரை கூறி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .