2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மரக்கன்றுகளை கையளிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 நவம்பர் 10 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 12இலட்சம் மரக் கன்றுகளை உற்பத்தி செய்து நடும் வேலைத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக உற்பத்திசெய்த மரக் கன்றுகளை கையளிக்கும் நிகழ்வும் இரண்டாம் கட்ட மரக் கன்றுகளை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை, வீரமுனையில் நடைபெற்றது.

 

இதன்போது, இத்திட்டத்தின் தலைவர் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம்.கோபாலரத்தினம் கல்முனை நகர லயன்ஸ் கழக தலைவர் கே. பொன்னம்பலத்திடம் சம்பிரதாய பூர்வமாக இவற்றினை கையளித்தார்.

இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநர் சபையின் உதவி பொருளாளர் சிவகுரு சன்முகநாதன், வலய தலைவர் எஸ்.தைரியராஜா, மாவட்ட தலைவர்  சிறிவேல்ராஜ் உற்பட பலர் கலந்துகொண்டனர்.

கல்முனை நகர லயன்ஸ் கழகம் அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான சம்மாந்துறை, நாவிதன்வெளி, கல்முனை தமிழ், கல்முனை முஸ்லீம், சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைசேனை பிரதேச செயலகப் பிரிவுகளில் 5000 பலன் தரும் பலா மரங்களை நடும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .