2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 மே 21 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து ஒரு கிலோ 12 கிராம் கஞ்சாவை  கைப்பற்றியதாகவும் பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் விற்பனைக்காக பையொன்றில் கஞ்சாவை  மறைத்துவைத்து  சைக்கிளில் கொண்டுசென்றபோது இவர் கைதுசெய்யப்பட்டதாகவும்  பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்தகுமார தெரிவித்தார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .