2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பட்டதாரி பயிலுநர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீள்பரிசீலிக்க கோரி மகஜர்

Suganthini Ratnam   / 2012 மே 25 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


பட்டதாரி பயிலுநர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் நடைமுறையை மீள்பரிசீலனை செய்யக் கோரி சம்மாந்துறை பிரதேச பட்டதாரிகள் ஒன்றியத்தினால் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு என தலைப்பிடப்பட்ட மகஜர் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூரிடம,; சம்மாந்துறை பிரதேச பட்டதாரிகள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்த மகஜரை கையளித்தனர்.

இந்த மகஜரில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டு விண்ணப்ப இறுதித் திகதியாக கடந்த 30.03.2012 அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் மாவட்ட செயலாளரினால் எதிர்வரும் 2012.05.28ஆம் 29ஆம் திகதிகளில் பட்டதாரி பயிலுநர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி தெரிவில் பல சிரேஷ்ட பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், தகைமை அடிப்படையும் பேணப்படவில்லை என்பது நிரூபணமாகின்றது. இதன் விளைவாக பட்டப்படிப்பை பூர்த்தி செய்து 5, 6 வருடங்கள் கடந்த பட்டதாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே தான் பட்டதாரி பயிலுநர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் நடைமுறையை மீள்பரிசீலனை செய்து முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .