2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 மே 27 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசங்களின் கிராம பிரிவுகளிலுள்ள சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று அஷ் சிறாஜ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிவில் பாதுகாப்புக் குழுவினரும் பொலிஸாரும் இணைந்து  கிராமப் பிரிவுகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவ்வேளைகளில் எதிர்கொள்ளும் இடர்கள், அவற்றினை முகம்கொள்வதற்கான யுக்திகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் மக்கள் பாதுகாப்பு பொறுப்பதிகாரியும், பொலிஸ் பரிசோதகருமான ஏ.எம்.எம். நஜீப் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எம்.ஹாஜா முகைதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கசோ என்னும் அரசசார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இச்செயலமர்வில்  அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களின் 80 கிராம பிரிவுகளின் சிவில் பாதுகாப்புக்குழுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .