2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தேசிய காங்கிரஸின் தூதுக்குழுவினர் - இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

Super User   / 2012 மே 27 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று விஷயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவை தேசிய காங்கிரஸின் தூதுக்குழுவினர் அம்பாறை மொண்டி  சுற்றுலா விடுதியில் சந்தித்து  கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் தேசிய காங்கிஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எல்.ஏ.அமீர், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல். துல்கர் நஹீம், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் சட்ட ஆலோசகரும் தேசிய காங்கிரசின் பிரதி கொள்கை பரப்புச் செயலாளருமான சட்டத்தரணி அமீருல் அன்சார் மௌலானா, கொள்கை பரப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத், தேசிய காங்கிரஸின்  தேசிய இளைஞர் அமைப்பாளரும் அக்கரைப்பற்று மேயருமான சக்கி அதாவுல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரைக்குமான ரயில் பாதையினை விஸ்;தரித்தல், அம்பாறை மாவட்டம் விவசாயத் தொழிலை பிரதானமாக கொண்டிருப்பதால் விவசாய ஆராய்ச்சி நிலையம் ஒன்றை நிறுவுதல், நெசவுக் கைத்தொழில் துறையினையும், குடிசைக் கைத்தொழில் துறையினையும் நவீன முறையில் விஸ்தரித்தல் உட்பட பல கோரிக்கைகளை இச்சந்திப்பில்  இந்திய உயர் ஸ்தானிகரிடம் முன்வைத்தனர்.

அத்துடன் வட மாகாணத்தின் அபிவிருத்தியினை போன்று கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களினதும் அபிவிருத்தியில் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தேசிய காங்கிரஸ் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0

  • razeek Monday, 28 May 2012 02:08 AM

    அபிவிருத்தி மட்டும் உரிமை எப்படி போனா என்ன நாட்டுல என்னன்னவோ நடக்குது. இவிங்க அபிவிருத்தி செய்றாங்க பள்ளிய ஒடச்சா இவுகளுக்கு என்ன, அரசியல் தொழில் நல்லாத்தான் நடத்துராங்க.

    Reply : 0       0

    neethan Monday, 28 May 2012 08:23 AM

    நல்லவை நடக்க வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .