2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஐக்கிய நாடுகள் கெபிடாட்டின் ஏற்பாட்டில் பங்குதாரர்களுக்கான பயிற்சிப்பட்டறை

Kogilavani   / 2012 மே 29 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

'அனர்த்த மீள் உருவாக்கம் பெறும் நகரத்துக்கான அபிவிருத்தி தந்திரோபாய ஏற்பாடு' என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் கெபிடாட் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட பங்குதாரர்களுக்கான பயிற்சிப்பட்டறை நேற்று கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வேலைத்திட்ட நடைமுறைப்படுத்துனர் பங்குதாரரான கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் காணப்படும் மூன்று பிரதேச செயலகங்கள் உட்பட அரச நிறுவனங்களினதும் உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

யு.என்.கெபிடாட் அமைப்பின் இலங்கைக்கான நிகழ்ச்சி முகாமையாளர் லக்ஸ்மன் பெரேரா தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில, மொரட்வை பல்கலைக்கழக கட்டிடக்கலைப்பீட பீடாதிபதி பி.கே.எஸ்.மகாநாம வளவாளராக பங்குபற்றியதுடன் யு.என்.கெபிடாட்டின் தேசிய தொழில்நுட்ப ஆலோசகர் டாக்டர் பாமி, ஸ்மாயில், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை தமிழ் பிரிவு பிரதேசசெயலாளர் கே.லவநாதன் உட்படத்துறைசார் அதிகாரிகள் யு.என்.கெபிடாட் அதிகாரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .