2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டிய நிகழ்வுகள்

Suganthini Ratnam   / 2012 மே 30 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


மே 31ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இதில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு, கடந்த வருட புகைத்தல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட சமுர்த்தி சங்கங்களின் நிர்வாகிகளுக்கான கௌரவிப்பு, இந்த வருட புகைத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வூட்டும்;; கொடி விற்பனை அங்குரார்ப்பணம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

சமுர்த்தி தலைமை அலுவலக முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் உட்பட பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .