2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பொதுச்சந்தைக்கு மசூர் சின்னலெப்பை சதுக்கம் என பெயர் சூட்டுமாற

Super User   / 2012 மே 30 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள பொதுச்சந்தைக் கட்டிடத்துக்கு அண்மையில் காலமான கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் நினைவாக 'மசூர் சின்னலெப்பை சதுக்கம்' எனும் பெயரினைச் சூட்டுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த செவ்வாய்கிழமை சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் பிரதேச சபை காரியாலயக் கட்டிடத்தில் இடம்பெற்றது. இந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே - பிரதேச சபை உறுப்பினர் முனாஸ் மேற்கண்ட கோரிக்கையினை முன்வைத்தார்.

இது தொடர்பில் உறுப்பினர் முனாஸ் மேலும் தெரிவித்ததாவதுளூ

மர்ஹும் மசூர் சின்னலெப்பை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரக கடமையாற்றியவர். அவர் இந்த ஊரின் அபிமானத்தை பெற்றவர். மக்களால் நேசிக்கப்படும் நல்ல மனிதர். நமது ஊருக்காகவும், கட்சிக்காகவும் பல தியாகங்களைச் செய்தவர்.

மர்ஹும் மசூர் சின்னலெப்பை முஸ்லிம் காங்கிரசில் இணையும் பொருட்டு, அப்போது அவர் வகித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகண தவிசாளர் பதவியை தூக்கி வீசிவிட்டு வந்ததை நாம் மறந்துவிட முடியாது.

அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் அச்சுறுத்தல்கள் இருந்த காலகட்டங்களில் அவற்றினை முறியடித்து, தைரியமாக கட்சிப்பணி செய்துவந்த மசூர் சின்னலெப்பையின் மறைவு நமக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

எனவே, அன்னாரை நினைவு கூறும் பொருட்டும், அவருக்குச் செய்யும் சிறிய நன்றி கடனாகவும் அவரின் நாமம் நிலைத்திருக்கும் வகையில் நாம் ஏதாவது செய்தல் அவசியமாகும்.

அதற்கிணங்க, அட்டாளைச்சேனை பிரதேச சபை மூலம் அட்டாளைச்சேனையில் நிர்மாணிக்கப்படவுள்ள  பொதுச்சந்தைக் கட்டிடத்துக்கு 'மசூர் சின்னலெப்பை சதுக்கம்' என பெயர் சூட்ட வேண்டுமெனும் விருப்பத்தினை இந்த சபையிலே தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

You May Also Like

  Comments - 0

  • waleeth Thursday, 31 May 2012 04:48 AM

    நல்ல சிந்தனை அப்படியே செய்யுங்கள். உப்பிட்டாரை உள்ளளவும் நினைப்போம்.

    Reply : 0       0

    uvais.m.s Thursday, 31 May 2012 05:13 AM

    பொதுச் சந்தையே கட்டவிடாமல் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். இதுல பெயரு வைக்கிறது தான் ரொம்ப முக்கியம். முதலில் கட்டி முடியுங்கள் .பெயரை அப்புறமா பார்க்கலாம்.

    Reply : 0       0

    Ziyath Ismail Thursday, 31 May 2012 10:13 AM

    உங்களின் கருத்தை பாராட்டுகின்றோம். உங்களைப் போன்றவர்களின் மேலான சிந்தனைகள் இன்னும் வெளிவரட்டும்.

    Reply : 0       0

    imathnm Thursday, 31 May 2012 03:05 PM

    அட்டாளைச்சேனையில் ஒரு கட்டதில் முஸ்லிம் காங்கிரஸுக்கு இருந்த சவாலை துணிவுடன் எதிர்கொன்டு வலுப்படுத்திய இம்மஹானுக்கு இத்தருணத்தில் இதையாவது செய்யுங்கள். வரவேற்கத்தக்கது.

    Reply : 0       0

    சனூஸ் Thursday, 31 May 2012 06:25 PM

    எதற்கும் நம்மவர்கள் தடையாகத்தானே இருப்பார்கள்.
    நல்லது நினைக்கும் நல்லது செய்யும் அனைவருக்கும் வழிவிடுங்க முதல்ல.

    Reply : 0       0

    siraj Thursday, 31 May 2012 06:29 PM

    நல்லது செய்ய இடங்கொடுங்கள்

    Reply : 0       0

    Hassan Friday, 01 June 2012 12:27 PM

    நன்றி. உங்கள் தலைவர் இதனை நடைமுறைபடுத்துவாரா?

    Reply : 0       0

    MAHTHOOM Saturday, 02 June 2012 10:52 AM

    மதிப்புக்குரிய முனாஷ் அவர்களுக்கு இவ்வாறான யோசனை வந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி நன்றி.

    Reply : 0       0

    ismath mohamed Sunday, 03 June 2012 04:17 PM

    உன்மையில் நல்ல விசயம்தான்.

    Reply : 0       0

    nanpan Tuesday, 05 June 2012 04:52 PM

    நண்பேன்டா முனாஸ் அவர்களின் நல் மனம் வாழ்க‌

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .