2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகள் அடங்கிய குழு சாய்ந்தமருது விஜயம்

Super User   / 2012 மே 30 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  ஸ்ரீலங்கா யூத் இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ்  கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் அடங்கிய குழுவொன்று நேற்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது இளைஞர் சேவை மத்திய நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

கிழக்கு மாகாண கரையோர இளைஞர் யுவதிகளுடனான பரஸ்பர புரிந்துணர்வினையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் பேணுவதுடன் கலை மற்றும் கலாசார விழுமியங்களை பரிமாறும் அடிப்படையில் இந்த ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல்,  கே.எம்.ஏ.றஸாக், கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல தேரர், கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் பணிப்பாளர் கே.தவராஜா மற்றும் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .