2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள குருந்தையடி சுனாமி வீட்டுத்திட்ட மக்கள்

Menaka Mookandi   / 2012 மே 31 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

கல்முனை குருந்தையடி நெதர்லாந்து செஞ்சிலுவை சங்க சுனாமி தொடர்மாடிவீட்டுத்திட்டத்திற்கான குடி நீர் வினியோகம் குறைக்கப்பட்டுள்ளதனால் அதில்குடியிருக்கும் சுமார் 1200 பேர் ஒரு மாதகாலமாக குடிநீர்ப் பிரச்சினை மற்றும் இதரதேவைகளை பூர்த்தி செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகதெரிவிக்கின்றனர்.

இவ்வீட்டுத் திட்டத்திலுள்ளவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள், மற்றும்கோரிக்கைள் அடங்கிய மகஜரை வீட்டுத்திட்டத்திலுள்ள குடும்பங்களினால் கையெழுத்திட்டுஇன்று காலை நீர்வழங்கள் அதிகார சபையின் அம்பாறை பிராதந்திய காரியாலயம்அமைந்துள்ள அக்கரைப்பற்றுக்குச் சென்று பிராந்திய முகாமையாளர் ஐ.எல். ஹைதர்அலியிடம் கைளித்தனர்.

தற்போது வரட்சியான கால நிலை, பாவனையாளர்களின் அதிகரிப்பு, புதிய இணைப்புபோன்றனவற்றினாலாயே இவ்வாறான நினை ஏற்பட்டுள்ளதெனவும், கூடிய விரைவில் இதற்கானதீர்வவு வழங்கப்படுமெனவும் பிராந்திய நீர்வழங்கள் அதிகார சபையின் முகாமையாளரினால்தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .