2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 01 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அட்டாளைச்சேனை பிராந்திய சுடர்ஒளி பத்திரிகை ஊடகவியாளர் ஒருவரை கடந்த 28 ம் திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்து நாளை சனிக்கிழமை காலை அட்டாளைச்சேனை பொதுச்சந்தை சதுக்கத்தின் முன்னால் ஊடகவியாளர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது

இவ்வார்பாட்டத்தில் அம்பாறை மாவட்ட மீடியா போரம், மூன்பிறைட் ஊடகவியாளர்சங்கம், தேசிய ஜக்கிய ஊடகவியாளர் ஒன்றியம், முஸ்லிம் ஜக்கிய ஊடகவியாளர் ஒன்றியம் ஆகிய நான்கு ஊடகவியாளர் சங்கங்கள் ஒன்றினைந்து சனிக்கிழமை காலை 11 மணிக்கு பொதுச்சந்தை சதுக்கத்தின் முன்னால் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் றசாக் (ஜவாத்) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் வியாழக்கிழமை ஆயர்படுத்தியபோது 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையில்
நீதிபதி விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .