2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனையில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 ஜூன் 02 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                 


  (எஸ்.மாறன்)

அட்டாளைச்சேனை பிராந்திய ஊடகவியாளர் ஒருவரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கடந்த 28 ஆம் திகதி தாக்கிய சம்பவத்தை கண்டித்து அட்டாளைச்சேனை பொதுச்சந்தை சதுக்கத்தின் முன்னால் இன்று சனிக்கிழமை பகல் ஊடகவியாளர்; எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தை அம்பாறை மாவட்ட மீடியா போரம், மூன்பிறைட் ஊடகவியாளர் சங்கம், தேசிய ஜக்கிய ஊடகவியாளர் ஒன்றியம், முஸ்லிம் ஜக்கிய ஊடகவியாளர் ஒன்றியம் ஆகிய நான்கு ஊடகவியாளர் சங்கங்கள் ஒன்றினைந்து நடத்தின.

இதில், 'பேனாமுனைக்கு முன் காடைத்தனம் வெற்றுத் தூசு', 'ஊடகவியாளருக்கு எதிரான அடக்கு முறையை நிறுத்து', 'ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த போராடுவோம்', என்பன உட்பட பல வாசகங்கள் தாங்கிய பதாகைகளுடன்  சந்தை பொதுச் சதுக்கத்திற்கு முன்னால் பகல் 12 மணிதொடக்கம்  ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





You May Also Like

  Comments - 0

  • AR Sunday, 03 June 2012 12:43 AM

    உன்மையாகவே ஊடகவியலலாளருக்கு ஆதரவா? அரசியலா?

    Reply : 0       0

    Rahman Sunday, 03 June 2012 04:44 AM

    04 ஊடக அமைப்புக்கள் சேர்ந்து செய்த ஆர்ப்பாட்டத்தில் 07 பேரைத்தானே காண முடிகிறது.

    மாகாணசபை உறுப்பினர் ஊடகவியலாளரை தாக்கியமை கண்டிக்கத்தக்கதே. ஆனால், இந்த ஆர்ப்பாட்டம் ஒரு நாடகமாகும்.

    எப்டியிருந்தாலும், ஊடகவியலாளரைத் தாக்கிய கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் காடைத்தனத்தைக் கண்டிக்கின்றோம்.

    Reply : 0       0

    kudyuran Sunday, 03 June 2012 07:11 AM

    ஐயா மொத்தம் 6 பேர்தான் கலந்து கொண்டார்களா?

    Reply : 0       0

    msa Monday, 04 June 2012 10:32 AM

    குளோசப் படத்தில் ஆட்களை எண்ணிப் பார்ப்பது புத்திசாலித்தனமாகாது. ஆனால் ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதை போலவே அவர்களுக்கு வால் பிடிக்காமலும் இருக்க முடியுமானால் தான் நல்லது...

    Reply : 0       0

    Hassan Basit Tuesday, 05 June 2012 08:22 AM

    நாம் நேரடியாக ஆர்ப்பாட்டத்தை அவதானித்தோம். உன்மையில் 6 அல்லது 7 ஊடகவியலாளர்களே அதில் பங்கேற்றனர்.

    Reply : 0       0

    Smeel Tuesday, 05 June 2012 01:06 PM

    இதில் உள்ளவர்களில் சிலர் அரசியல்வாதிகள். ஒருவர் கடந்த பிரதேதச சபைத் தேர்தலில் கட்சியொன்று சார்பாகப் போட்டியிட்டவர். இவர் ஊடகவியலாளரும் இல்லை. அப்படியென்றால் இது அரசியல் நாடகம் என்பதில் தவறில்லை. மு.காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் தாக்கினார் என்பதற்காக அந்தக் கட்சிக்கு எதிரான அரசியல்வாதிகள் பதாகை பிடித்துள்ளார்கள். உண்மையில், இவ்வாறான விடயங்களில் அரசியல் கலக்கக் கூடாது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .