2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை அமைச்சர் நிமல் ஆரம்பித்துவைப்பு

Super User   / 2012 ஜூன் 04 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட சுமார் 14,000 ஏக்கர் நெற்செய்கை நிலங்கள் பயன்பெறும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சம்புக்களப்பு வடிச்சல் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கையினை - உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அழைப்பின் பேரில் நீர்ப்பாச மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற மேற்படி ஆரம்ப நிகழ்வு அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பகுதியில் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. மிதக்கும் மண் அகழும் இயந்திரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த வேலைத் திட்டத்தின் மூலமாக இப்பிரதேசத்திலுள்ள நெற் செய்கை நிலங்களுக்கான வடிச்சல் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

சம்புக்களப்பு பகுதியில் வடிச்சல் வசதியின்மை காரணமாக, பல்லாயிரக்கணக்கான நெற் செய்கை நிலங்களில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் மேற்கொள்ள முடியாமலிருந்த நிலையிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  மேற்படி மூன்றாம் கட்ட திட்டத்தின் மூலம் மீனோடைக்கட்டு முதல் பீலியடி வரையில் வடிச்சல் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தின் மூலம் இப்பகுதியிலுள்ள வளலவாய், குடாக்கரை, கணையான்குழி, இப்றாகிம் பள்ளம், காட்டுவெளி மற்றும் சீனன் வெட்டி உள்ளிட்ட கண்டங்களிலுள்ள நெற் காணிகள் நன்மையடையவுள்ளன. சம்புக்களப்பு வடிச்சல் தோண்டும் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள்  மூலம் சுமார் 100 அடி அகலமும், 08 அடி ஆழமும் கொண்ட வடிச்சல் - கால்வாய்கள் தோண்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .