2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் சாய்ந்தமருது பெஷன் ஹவுஸ் உரிமையாளர் மரணம்

A.P.Mathan   / 2012 ஜூன் 04 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)

கல்முனைக்குடியைச் சேர்ந்த சாய்ந்தமருது பெஷன் ஹவுஸ் உரிமையாளர் முஹம்மது றியாஸ் (வயது 29) வாகன விபத்தில் சிக்கி இன்று மாலை அகால மரணமானார்.

நிந்தவூர் - ஒலுவில் பிரதான வீதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதுண்டு படுகாயங்களுக்குள்ளான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்க செல்லும் வழியிலே மரணமடைந்துள்ளார்.

கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகத்தின் உயர் பீட உறுப்பினரான இவர் சிறிது காலம் வெளிநாட்டில் தொழில் புரிந்திருந்தார்.

இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .