2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார் எஹியாகான்

A.P.Mathan   / 2012 ஜூலை 27 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைசசின் இணைப்பாளருமான ஏ.ஸி.எஹியாகான் இன்று வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மூலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமின் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் எஹியாகான் இணைந்து கொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்ட இவர் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தக்கண்டியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலும் தலைவருடன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போதய கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ.பஸீர், ஏ.எம்.பறகதுல்லாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • S.Sinasudeen Saturday, 28 July 2012 07:52 AM

    வெல்கம் வெல்கம் வெல்கம் வெல்கம்

    Reply : 0       0

    Amrin Saturday, 28 July 2012 10:27 AM

    எஹியாகான் அவர்களை வரவேற்போம். இப்போதாவது முஸ்லிம் காங்கிரஸின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொண்டு சரியான தலைமைத்துவத்தோடு இணைந்து கொண்ட விடயமானது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது. எஹியாகான் அவர்களுக்கு நன்றிகளும் பலகோடி வாழ்த்துக்களும்.

    Reply : 0       0

    sirajudeen Saturday, 28 July 2012 02:04 PM

    வெல்கம் எஹியாகான்.

    Reply : 0       0

    Sanoon Mohideen Saturday, 28 July 2012 05:56 PM

    வரவேற்கிறோம்......

    Reply : 0       0

    jesmin Sunday, 29 July 2012 04:52 AM

    கல்முனை மாநகர சபைதேர்தலில் போட்டியிட்டு வெல்லமுடியாதவர். இவர்களோடு இணைந்து எத்தனை வோட்டுக்களை எடுத்துக் கொடுக்கப் போகின்றார்?

    Reply : 0       0

    ABDUL Sunday, 29 July 2012 09:37 AM

    லேட்டானாலும் பரவாயில்ல ......வெல்கம் , சி.ல.மு.கா.வால்க ......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .