2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில் குடும்பம் பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மீடடுள்ளனர்.

தனது தாய் மற்றும் 4 வயதுடைய மகனுடன் பாலமுனைக் கிராமத்தில் வசித்து வந்த பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறையை சொந்த இடமாகக் கொண்டவரான இவரின் கணவர் மத்தியகிழக்கு நாடொன்றில் பணி புரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்மாந்துறையைச் சேர்ந்த இவர் பாலமுனைக் கிராமத்தில் தனது 4 வயதுடைய மகன் மற்றும் தாயாருடன் சிலகாலமாக வசித்து வந்தார். இவர்கள் தமக்கென புதிய வீடொன்றினையும் அங்கேயே நிர்மாணித்து வருகின்றனர்.

நிர்மாண வேலைகளுக்காக வந்திருந்த நிர்மாணத் தொழிலாளர்கள் வேலை முடிந்து சென்றுள்ளனர்.

இதன் பின்னரே குறித்த பெண்ணை காணாது தேடியவேளையில் அவரது சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X