2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் மினி சூறாவளி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

அம்பாறை மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால் கரையோரப் பிரதேசங்களிலுள்ள கட்டங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் கல்முனை, மருதமுனை  உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்களிலும் மாவடிப்பள்ளி முதலான பகுதிகளிலும் கட்டங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

கல்முனையிலுள்ள அல்ஹாமியா அரபுக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்று முழுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. தற்போது அப்பகுதிகளில் கடும்  மழையுடன் பலத்த காற்றும் வீசிவருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X