2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, ஒலுவில் துறைமுகத்திற்கு முன்பாக தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 03 பேரை நேற்று சனிக்கிழமை  கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து 380 சிகரட்டுகளையும் கைப்பற்றியதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

ஒலுவில் துறைமுகத்திற்கு முன்பாக தடைசெய்யப்பட்ட  சிகரட்டுக்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து 60 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அதே இடத்தில்; அன்றையதினம் பிற்பகல் 2.45 மணியளவில் தடைசெய்யப்பட்ட  சிகரட்டுக்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 300 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், 20 சிகரெட்டுக்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் மற்றுமொருவர்; கைதுசெய்யப்பட்டார்.

சாய்ந்தமருது, பாலமுனை உதுமாபுரம், காரைதீவு உபதபால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X