Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Thipaan / 2015 மே 09 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
பயங்கரவாதம் நிலவிய காலத்தில் அமைதியான செயற்பாடுகள் மூலம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் எனக்குள்ளது என இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபன செயற்பாட்டுப் பணிப்பாளரும் அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், மு.காங்கிரசின் ஊடகப் பணிப்பாளருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.
அதேபோன்று, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பதவியின் மூலம்- முடிந்தவரையில் மக்களுக்கு சேவை புரிவதே எனது நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் உள்ள, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளராக, எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தமது கடமைகளை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (08) முற்பகல் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வின் பின் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஹனீபா மதனி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'ஆட்சி மாற்றத்தின் பின்னர், புதிய ஜனாதிபதியும் பிரதமரும் நல்லாட்சியினை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினூடாகவும் நல்லாட்சிக்கான ஆதரவினை வழங்க முடியும்.
அதை இக் கூட்டுத்தாபனத்தின் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டியுள்ளது.
அரசியலிலும், சமய, சமூக, சமாதானப் பணிகளிலும் ஈடுபடுவதற்கு முன்பு, கட்டட நிர்மாணத்துறையில் உயர் தரத்திலான நிறுவனமொன்றினை நடத்திய அனுபவம் எனக்குள்ளது.
அந்த அனுபவத்தினைப் பயன்படுத்தி, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினூடாக, சிறப்பான பணியினை ஆற்ற முடியும் என்று நான் நம்புகின்றேன்.
இதேவேளை, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில், செயற்பாட்டுப் பணிப்பாளர் பதவியினை எனக்கு வழங்கிய, எனது கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு இந்த இடத்திலும், எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், எனது கடமையை பொறுப்பேற்கும் இந்த நிகழ்வினை, மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் மற்றும் பொது முகாமையாளர் ஸ்ரீமதி சேனாதீரவுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹஸனலி, நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் சபீக் ரஜாப்தீன், கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ஸ்ரீமதி சேனாதீர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிதிப் பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சீ. எஹியாகான் மற்றும் மு.காங்கிரசின் ஸ்தாபக செயலாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் உட்பட கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago