2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ் 

அம்பாறை ஒலுவில் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடம் வெள்ளிக்கிழமை(15) திறந்து வைக்கப்பட்டது.

இக்கட்டடத் தொகுதி  85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .