2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 மே 20 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.எஸ்.எம். ஹனீபா, வி.சுகிர்தகுமார்

பொத்துவில், அறுகம்பையில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரெருவர் உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் தபாலக வீதியை சேர்ந்த முகம்மது ஹனீபா அப்துல் றபீக் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொத்துவில் அறுகம்மை பிரதான வீதியூடாக சென்றுகொண்டிருந்த துவிச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் துவிச்சக்கரவண்டியில் சென்ற இவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .