2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அனுதிப்பத்திர நிபந்தனையை மீறி மண் ஏற்றி நபர் கைது

Thipaan   / 2015 மே 23 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீகவாபி பிரதேசத்தில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மண் ஏற்றி நபரொருவரை இன்று சனிக்கிழமை (23) முற்பகல் கைது செய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார்  தெரிவித்தனர்.

தீகவாபி பிரதேசத்தில் பெரிய டிப்பர் வாகனத்தில் மண்ணை அகழ்ந்து ஏற்றிக் கொண்டு பாலமுனை வயல் பிரதேசம் ஊடாக பிரதான வீதிக்கு வரும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், டிப்பர் வாகனத்தை மண்ணுடன்  கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .