Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 மே 25 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி கடல் மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், இன்று திங்கட்கிழமை (25) தீர்ப்பளித்தார்.
குறித்த நபர், அக்கரைப்பற்று வடிகான் வீதியில் வைத்து அக்கரைப்பற்று பொலிஸாரால் நேற்று (24) கைது செய்யப்பட்டிருந்தார்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் குறித்த நபரை இன்று (25) ஆஜர் செய்த போதே மேற்கண்ட உத்தரவை நீதவான் விதித்தார்.
அம்பாறை, தீகவாபி பிரதேசத்தில் அனுமதிப் பத்திரத்தை மீறி மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு நபருக்கு 10,000 ரூபாய் அபராதமும் இன்று (25) விதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
54 minute ago
3 hours ago
5 hours ago