2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு

Princiya Dixci   / 2015 மே 28 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் அனர்த்தப் பாதுகாப்புத் தொடர்பான செயலமர்வு, வியாழக்கிழமை (28)இடம்பெற்றது.

யுனிசெப் நிறுவனத்தின் அணுசரணையில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.நஜிமின் வழிகாட்டலில் நடைபெற்ற இச்செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.நஜிம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஏ.ஏ.ரசூல், ஏ.எம் ஹீசைன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் வளவாளராக பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் எஸ். குருபரன் கலந்துகொண்டார்.

மேலும், மாணவர்கள, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதில் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X