2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட உறுதிப்பத்திரத்தை வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்க அங்கிகாரம்

Gavitha   / 2015 மே 30 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ் 

கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்டத்தின் உறுதிப் பத்திரத்தை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளரும் கல்முனை மாநகர முதல்வருமான சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.

கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பரின் கோரிக்கையை ஏற்று, நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் றவூப் ஹக்கீம் விடுத்த பணிப்புரைக்கமைவாக இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுனாமி அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமாபாத் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தின் உரித்து கடந்த பல வருடங்களாக நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து வருகின்றது.

இதனால் அங்கு எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் பல நிர்வாகச் சிக்கல்களும் இழுபறிகளும் காணப்பட்டு வருவதுடன், அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டு உறுதிப்பத்திரம் வழங்க முடியாத நிலை காணப்பட்டது. 

மேலும் இந்த உரிமத்தை மாற்றுவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் விண்ணப்பம் செய்யப்பட்ட போதிலும் அது தொடர்பில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இந்த விடயத்தை கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்த அதிகார சபையின் பணிப்பாளருமான சட்டத்தரணி என். நிசாம் காரியப்பர் நகர அபிவிருத்தி நீர்வழங்கல் வடி காலமைப்பு அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக சுட்டிக்காட்டினார்.

இதன் பிரகாரம் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபைக்கூட்டத்தில் இவ்விடயம் ஆராயப்படடு தம்மிடமிருக்கும் அதன் உரிமத்தை வீடமைப்பு அதிகார சபைக்கு வழங்குவதற்கு அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .