R.Tharaniya / 2025 ஜூலை 22 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தைகள் தங்கள் பெற்றோர் இருவரையும் அறிந்துகொள்ள உரிமை உண்டு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மன மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
எனினும், நாட்டில் இடம்பெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது ஒவ்வொன்றும் தலைகீழாகவே இடம்பெறுகின்றன.நாட்டின் பொருளாதார நிலைமைகளை பார்க்குமிடத்து, முழுமையான நேர பணியில் ஈடுபட்டிருந்தாலும், பகுதிநேர தொழில் அல்லது தொழில்களைச் செய்யவேண்டும்.
எனினும், செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் பலரும் பல வகையான விடயங்களைக் கையாளுகின்றனர்.வாடகைக்கு வாகனங்களை அமர்த்திக் கொள்வதை குறைத்துக்கொண்டுள்ளனர்.
பொது போக்குவரத்தில் பயணிப்போர், இறங்கவேண்டிய ஒரு பஸ் தரப்பிடத்துக்கு முன்னதாக இறங்கிக்கொள்கின்றனர். இதனால், ஒரு சிறுதொகை மிச்சப்படுத்தப்படுகின்றது. இன்னும் சிலர், வெளிநாடுகளுக்குப் படையெடுக்கின்றனர்.
தனது தாய் வெளிநாட்டிலிருந்தபோது, தந்தை சித்திரவதை செய்ததால் வீட்டை விட்டு காட்டுக்கு ஓடிய 14 வயது பாடசாலை மாணவியைக் கண்டுபிடித்துள்ளதாக ஹதரலியத்த பொலிஸார் தெரிவித்தனர். இது மிக அண்மையில் இடம்பெற்ற சம்பவமாகும். ஆக, குழந்தைகள் மீதான சித்திரவதைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குழந்தைகள் தங்கள் திறன்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப கல்வி கற்பிக்கப்பட வேண்டும். அவர்களைப் பாதிக்கும் முடிவுகளை எடுப்பதற்கு முன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். குழந்தைகள் வளர்ந்து முதிர்ச்சி அடையும் போது அவர்களுக்கு அதிக கருத்து தெரிவிக்க வேண்டும்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட பெரும்பாலான விபத்துகள் வீட்டில் நிகழ்கின்றன. பாதுகாப்பான சூழல் மற்றும் பெற்றோரின் மேற்பார்வை வாழ்க்கையின் முதல் ஆண்டில் ஏற்படும் விபத்துகளின் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கிறது.
கடுமையான விபத்துகளைத் தடுக்க, பெற்றோர்களும் குழந்தைகளைப் பராமரிக்கும் மற்றவர்களும் விபத்துகளுக்கும் ஒவ்வொரு வயதுக் குழந்தைகளின் உடல், மன மற்றும் உணர்ச்சி வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை அறிந்திருக்க வேண்டும்.
குழந்தைகள் 10-12 வயது வரை சூழலில் ஏற்படும் விபத்துகளை மதிப்பிட்டுச் சமாளிக்க முதிர்ச்சியடைய மாட்டார்கள்.ஏற்றுக்கொள்ள முடியாத
சூழ்நிலையில் வாழும் அல்லது தங்கள் சொந்த உடல்நலம் மற்றும் வளர்ச்சிக்கு ஆபத்தை விளைவிக்கும் குழந்தைகள் தேவையான உதவியைப் பெறுவதை உறுதி செய்வதே குழந்தை பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கமாகும்.
13-18 வயதுடைய இளைஞர்கள் தங்கள் பெற்றோரின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மற்றவர்களின் கருத்துகளை மதிக்க வேண்டும், மேலும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்.
18 வயதில், இளைஞர்கள் சட்டப்பூர்வ திறனைப் பெறுகிறார்கள், அதாவது அவர்களின் சொந்த நிதி மற்றும் தனிப்பட்ட விவகாரங்களைத்
தீர்மானிக்கும் உரிமை.
இதன் பொருள் அவர்கள் தங்கள் சொந்த சொத்துக்களுக்குப் பொறுப்பாவார்கள், மேலும் அவர்கள், எங்கு வாழ விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியும், ஆனால் அவர்கள் தங்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறும் உரிமையை இழக்கிறார்கள்.
22.07.2025
7 minute ago
21 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
40 minute ago