R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சவால்களை சமாளிப்பதன் மூலம் அவர்களின் ஆளுமை, தலைமைத்துவ திறன்கள் மற்றும் அபிலாஷைகளை மேம்படுத்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பது” என்பது இளைஞர் சேவைகள் மன்றத்தின் நோக்கமாகும்.
இந்த நிறுவனம் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இலங்கையில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர் சங்கங்கள் நிறுவப்பட்டன, மேலும் அந்த இளைஞர் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு அறிவியல், கலை மற்றும் வணிகம் ஆகிய மூன்று துறைகளிலும் தொழில் பயிற்சி வழங்கப்பட்டது.
இளைஞர் சேவை தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பட்டம் பெற்ற பல்வேறு வல்லுநர்கள் நாடு முழுவதும் அரசு சேவை மற்றும் சுயதொழில் ஆகியவற்றில் இணைக்கப்பட்டனர்.
இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருந்த இளைஞர் சேவை சங்கங்கள் அல்லது ‘இளைஞர் கழகங்கள்’, 1979இல் நிறுவப்பட்டது.
இந்த இளைஞர் கழக அமைப்பு, அரசியல், நிறுவன வலிமை மற்றும் பொது சேவையின் அடிப்படை கூறுகளில் இளைஞர் தலைமுறைக்குப் பயிற்சி அளித்தது. கட்சி அரசியல் மயமாக்கல் இல்லாமல் மிதமான அரசியலைப் பயிற்றுவித்த ஒரு அமைப்பாக அந்த சமூக அமைப்பு தொடர்ந்தது.
இந்த நாட்டு மக்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்தனர். இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சங்கங்களை அரசாங்கம் அரசியல் மயமாக்குவது குறித்து இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்? தோல்வியடைந்த ஜே.வி.பி. வேட்பாளர்களை இளைஞர் சங்கங்களின் தலைமைப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்ற பிரச்சாரமும் செல்வாக்கும் இப்போதெல்லாம் நடந்து வருகிறது.
வழக்கமாக, தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு அரசாங்கமும், வெற்றி பெற்ற கட்சியின் தோல்வியுற்றவருக்கு ஒரு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் குறைந்தபட்சம் ஒரு பதவியையாவது வழங்குகிறது. அந்த மக்களை மகிழ்விப்பதற்கும், அவர்களைக் கட்சியுடன் மேலும் பிணைப்பதற்கும் இது செய்யப்படுகிறது. இளைஞர் சங்கங்களுக்கு எதிராக இந்த தந்திரோபாயம் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஒரு நாட்டில் அரசியல் அதிகாரத்தை எந்த அரசாங்கமும் கைப்பற்றினால், அதிகாரங்களைக் கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் ஓர் அரசாங்கம் நிலையானதாக இருக்கும். இந்த கோட்பாடு எவ்வளவு நெறிமுறையானது என்பதை அரசாங்கம் அடுத்து பரிசீலிக்க வேண்டும்.
தேசிய இளைஞர் சேவை மன்றம் முழு இலங்கை இளைஞர்களின் உச்ச புகலிடமாகும். அதைத் தேசத்திற்குப் புனிதமாகப் பாதுகாப்பதும் ஆட்சியாளர்களின் கடமை என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
எனினும், இளைஞர் சேவைகள் மன்றத்தையும், இளைஞர் சம்மேளன பிரதேச சம்மேளனங்களையும் மக்கள் விடுதலை முன்னணியின் நிரந்தரக் கிளையாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அது அவ்வாறில்லை என்பதைத் தேசிய
மக்கள் சக்தி அரசாங்கம் நிரூபிக்கவேண்டும்.
இல்லையேல், கடந்தகால அரசாங்கங்களின் அரசியல்யொட்டியே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் பயணிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாக அமையும்.
6 minute ago
20 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
39 minute ago