R.Tharaniya / 2025 மே 15 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நந்தவன உற்சவம் புதன்கிழமை (14) அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அம்பாள், விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை ஆகிய பரிவார மூர்த்திகளுடன் வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளி உள்வீதியுடாக வலம் வந்து, பின்னர் வெளி வீதியூடாக நந்தவன பீடத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
பு.கஜிந்தன்









அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .