Freelancer / 2023 மே 25 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரேலியா ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேக பெருவிழா 24.05.2023 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இதில் மூலஸ்தான அம்மனுக்கு கண் திறக்கும் நிகழ்வுக்கு பசு ஒன்று அழைத்து வரப்பட்டு குருக்களால் கோமாதா பூசை செய்யப்பட்டது.
இந்த தருணத்தில் பூசை செய்யப்பட்ட பசு குழுக்களுக்கு முத்தமிட்ட காட்சி சிறப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சுமார் இருபது நாட்களில் தோட்ட மக்களின் ஒத்துழைப்புடன் ஆலய பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ புண்ணியமூர்த்தி திருக்குமார் தலைமையில் இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வு மலையக திட்டப்படி ஆலயங்களின் சிவாச்சாரியார் பட்டம் பெற்ற குருக்கள் மலையக குருக்களால் இடம்பெற்றமை சிறப்பு அம்சமாகும்.
ஆ.ரமேஸ்


4 minute ago
28 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
28 minute ago
38 minute ago