R.Tharaniya / 2025 மே 25 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு உற்சவ காலத்தில் ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள பந்தலிற்கான அங்குரார்ப்பண நிகழ்வு சனிக்கிழமை (24) அன்று இரவு சிறப்புற நடைபெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள நிலையில் இப் பந்தல் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய மேற்கு வீதியில் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக நிகழ்ந்த ஆரம்ப வைபவத்தில் ஆலய அடியவர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





நிதர்சன் வினோத்
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025