R.Tharaniya / 2025 ஜூன் 25 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அராலி மேற்கு ஸ்ரீ பேச்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் 7ஆம் திருவிழாவான வேட்டைத் திருவிழாவானது செவ்வாய்க்கிழமை (24) அன்று சிறப்பாக நடைபெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் பேச்சி அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பேச்சியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வீற்றிருந்து,மங்கல வாத்தியங்கள் முழங்க, பொம்மலாட்டங்களுடன் அராலி மத்தி பேச்சியம்மாள் ஆலயத்தை சென்றடைந்து அங்கு வேட்டையாடினார்கள்.
பின்னர் பக்தர்கள் புடைசூழ அங்கிருந்து மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்தாள். ஆலயக் ஆலயத்தின் வேட்டைத்திருவிழா கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர். பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
கடந்த 17.06.2025 அன்று ஆரம்பமான திருவிழாவானது 25.06.2025 அன்று வேள்வி உற்சவத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.




பு.கஜிந்தன்
42 minute ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025