R.Tharaniya / 2025 மார்ச் 16 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாமிமலை ஓல்டன் நிலாவத்தை தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (16) வெகு கோலாகலமாக இடம் பெற்றது.
இதனை தொடர்ந்து சனிக்கிழமை (15)பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகங்களுக்கு என்னை காப்பு நிகழ்வு இடம் பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (16)காலை விநாயகர் வழிபாடு இடம்பெற்றதுடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் ஆலயத்திற்கு பக்தர்களால் தீர்த்தம் எடுத்து சென்று சிவனுக்கு அபிஷேகம் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து யாகசாலையில் பஞ்ச குண்டம் யாகம் இடம் பெற்று பிரதான கும்பம் அரோகரா கோசத்துடன் மேல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.
மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளது கருமாரியம்மனுக்கு விசேட அலங்கார அபிஷேகம் இடம்பெற்றது இந்த கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் பிரதான குருக்கள் சத்யோயாத சிவச்சாரியார் தலைமையில் இடம்பெற்றதோடு பெருந்திரலான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர் இதேவேளை பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.
எஸ் சதீஸ்





8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025