Freelancer / 2023 மே 25 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
திருகோணமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் வருடாந்தப் பொங்கல் விழாவானது வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திர குருக்கள் தலைமையில் திங்கட்கிழமை 2023.05.29 நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் வளந்து வைக்கும் வைபவமும் இரவு 6.00 மணிக்கு பொங்கல் பூசையும் நடைபெறும். அடியார்கள் அனைவரும் முன்னதாகவே ஆலயத்திற்கு வந்து தத்தமது நேர்த்திகளை முடித்து பொங்கல் விழாவில் கலந்து அம்பாளின் திருவருளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .